அரசியலுக்கு வந்தா மட்டும் போதாது…. எல்லாருக்கும் மதிப்பு கொடுக்க தெரியணும்… விஜய்யின் அரசியல் குறித்து நடிகர் சூரி..!

Spread the love

நடிகர் சூரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவருடைய பிறந்தநாளுகாக சாமி தரிசனம் பெறுவதற்கு சென்றுள்ளார். கோவிலில்  இருந்த பக்தர்கள் சூரியை பார்த்தவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கூறினார். பின்பு எனக்கும் என் தம்பிக்கும் இன்று பிறந்தநாள் நாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். என்னுடைய வளர்ச்சிக்கு எனது ரசிகர்களும் உறவினர்களும் தான் முழுக் காரணம் என்றும் , அதேபோல்  அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் என் அண்ணன் தம்பிகள் தான் என்றும் கூறியுள்ளார்.

மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றிக் கொடுத்தது. இப்பொழுது மாண்டி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தெரிவித்தார். கடலில் நடைபெறும் வீர விளையாட்டான போர்ட் ரேசிங் தான் மாண்டி படத்தின் கதைகளம். காமெடி நடிகர்கள் குறைந்து கொண்டேவருவதை குறித்த சூரியிடம் கேள்வி எழுப்பினர். திரைவுலகில் காமெடிகள் நன்றாக தான் போய்க் கொண்டிருக்கிறது இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள், அடுத்த நிறைய பேர் வரவேண்டும், எனக்கு வாய்ப்பு கொடுத்ததினால் தான் நான் இந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளேன்.  அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் முன்னேறுவார்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சரை விமர்சனம் செய்ததை பற்றி நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, அனைவரும் அரசியலை தாண்டி எல்லோரையும் மதிக்க வேண்டும். விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு போனது அவருடைய விருப்பம், ஏன் அவர் திரும்பி கூட வரலாம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவருக்கும் என்னை பிடிக்கும் என்று சூரி அவருடைய கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

2 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

4 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

7 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

11 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

12 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

16 minutes ago