நடிகர் சூரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவருடைய பிறந்தநாளுகாக சாமி தரிசனம் பெறுவதற்கு சென்றுள்ளார். கோவிலில் இருந்த பக்தர்கள் சூரியை பார்த்தவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கூறினார். பின்பு எனக்கும் என் தம்பிக்கும் இன்று பிறந்தநாள் நாங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். என்னுடைய வளர்ச்சிக்கு எனது ரசிகர்களும் உறவினர்களும் தான் முழுக் காரணம் என்றும் , அதேபோல் அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் என் அண்ணன் தம்பிகள் தான் என்றும் கூறியுள்ளார்.
மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றிக் கொடுத்தது. இப்பொழுது மாண்டி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தெரிவித்தார். கடலில் நடைபெறும் வீர விளையாட்டான போர்ட் ரேசிங் தான் மாண்டி படத்தின் கதைகளம். காமெடி நடிகர்கள் குறைந்து கொண்டேவருவதை குறித்த சூரியிடம் கேள்வி எழுப்பினர். திரைவுலகில் காமெடிகள் நன்றாக தான் போய்க் கொண்டிருக்கிறது இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள், அடுத்த நிறைய பேர் வரவேண்டும், எனக்கு வாய்ப்பு கொடுத்ததினால் தான் நான் இந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளேன். அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் முன்னேறுவார்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சரை விமர்சனம் செய்ததை பற்றி நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, அனைவரும் அரசியலை தாண்டி எல்லோரையும் மதிக்க வேண்டும். விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு போனது அவருடைய விருப்பம், ஏன் அவர் திரும்பி கூட வரலாம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவருக்கும் என்னை பிடிக்கும் என்று சூரி அவருடைய கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
