தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் சக்கரபாணி. தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. ரேஷன் கார்டில் ஒரேவகை என்றுத் தான் மக்களுக்கு தெரியும். ஆனால் மொத்தமாக 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது உங்களுக்கு தெரியுமா.
ஐந்து வகை ரேஷன் கார்டுகள்:
1. அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு,
2. முன்னுரிமை ரேஷன் கார்டு,
3. முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு,
4. சக்கரை விருப்பு அட்டை ரேஷன் கார்டு,
5. பொருளில்லா அட்டை ரேஷன் கார்டுகள்.
பொருளாதார தகுதிகளுக்கு ஏற்ப கொடுக்கப்படுகின்றன. இதுபோன்ற எந்த வகை ரேஷன் கார்டு ஆக இருந்தாலும் உரிய ஆவணங்களை கொடுத்து ரேஷன் கார்டு வகைகளை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக அப்டேட் ஒன்று வந்துள்ளது. அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது குடும்ப அட்டைகளுக்கு அப்டேட் ஒன்று வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
5 லட்சம் குடும்ப அட்டைகள், முன்னுரிமைஅற்ற அட்டையில் இருந்து முன்னுரிமை அட்டையாக மாற்றிக் கொள்ள அனுமதி கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் குடும்ப அட்டைகளை அப்டேட் செய்து கொள்ளுமாறும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து ரேஷன் கார்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு முன்னுரிமை ரேஷன் கார்டு கொடுக்கப்படும். இவர்கள் ரேஷன் கடையில் அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஓரளவுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு முன்னுரிமை அற்ற ரேஷன் கார்டு கொடுக்க உள்ளது. அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடையில் கிடைக்கும். பொதுமக்கள் ரேஷன் கார்டின் வகைகளை மாற்ற விரும்பினால், விண்ணப்பியுங்கள் ஒரே நாளில் கூட ஒப்புதல் கொடுக்கப்படலாம்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…