நடிகர் சிலம்பரசன் 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் என்று அடிக்கடி தகவல் பரவி பின்பு அது வதந்தி என தெரிந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தனது திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் சொன்ன ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் சிம்பு கூறியிருப்பதாவது, இன்றைக்கு மொபைல் போன்கள் வந்த பிறகு மனித உணர்வுகள் மாறிவிட்டன. எவ்வளவு வேகத்தில் காதலிக்கிறார்களோ அதே வேகத்தில் பிரியவும் செய்கிறார்கள். எல்லாமே வேகவேகமாய் நடக்கிறது. அதே நேரத்தில் ஆழமான உறவுகள் இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்னை பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயம் இல்லை. மனதளவில் நாம் தயாராக இருக்கும்போது மட்டுமே அதை செய்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று நடிகர் சிம்பு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இப்போது சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…