CINEMA
மலேஷியா ஏர்போர்ட்டில் மாஸ் லுக்கில் நடிகர் சிம்பு… ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரின் தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
தந்தையை போன்றே மகனும் தற்பொழுது திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். என்னதான் வாரிசு நடிகராக களமிறங்கி இருந்தாலும் தனது திறமையால் தற்பொழுது திரையுலகில் சாதித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்தது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் 100 கோடியையும் தாண்டி வசூலித்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
சமீபத்தில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இயக்க உள்ள ‘எஸ்டிஆர் 48’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு கமிட்டாகியுள்ளார்.
தற்பொழுது நடிகர் சிம்பு தனது குடும்பத்துடன் மலேசியாவிற்கு யுவன் சங்கர் ராஜா ஏற்பாடு செய்துள்ள மிகப்பெரிய இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த விழாவில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பாடல் ஒன்றை பாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் தன் பங்கிற்கு நடிகர் சிம்புவும் இந்த இசை நிகழ்ச்சியில் பாட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் சிம்பு மலேசியா ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.