ஒருதலை ராகம் இது இளையராஜா இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு இசை காவியம். இளையராஜா இல்லாமலும் ஒரு படத்தை வெற்றிப்படமாக எடுக்க முடியும் என்று அந்தக் காலகட்டத்தில் நிரூபித்த ஒரே பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தான். அதுமட்டுமல்லாமல் கஷ்டங்களை கூட கண்ணியமாக அதே நேரத்தில் காவியமாக எடுக்க முடியும் என்று நிரூபித்த படம் ஒரு தலை ராகம்.
சோகங்களை கூட காவியமாக காட்டியது இந்தப் படம். இத்திரைப்படத்தில் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் ஷங்கர். இவர் மலையாள சினிமாவில் பிரேம் நசீர் காலத்திற்கு பின்னர், மோகன்லால் காலத்திற்கு முன்பு இவர் முன்னணி நடிகராக இருந்தவர். கேரளாவில் பிறந்த இவருக்கு, நான்கு வயதான போது, இவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர், சினிமா நடிப்பு தொடர்பான படிப்பையும் முடித்தார்.
தமிழில் ஒரு தலை ராகம் படத்தில் முன்னணி வேடத்தில் இவர் நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் சுஜாதா, கோவில் புறா, மவுன யுத்ஹம் மற்றும் ராகம் தேடும் பல்லவி, காதல் எனும் நதியினிலே போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஒரு கால கட்டத்திற்கு பிறகு இவரின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் இணையத்தில் வெளியாகவில்லை. தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…