தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பின் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கியுள்ளன. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டரை பயன்படுத்தவுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், எனவே, இரண்டு கதாநாயகிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தளபதி 68ல் சினேகா நடிப்பதை உறுதி செய்யும் விதமாக சினேகா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. முதலில் இது தளபதி 68 படத்திற்காக என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், இது தளபதி 68 படத்திற்காக கிடையாது, சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும் ஷாட் பூட் த்ரீ படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பது என்பதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது வருத்தத்தில் உள்ளனர்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…