சென்னை தி நகர் பகுதியில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர் கடந்த 11ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைக்குள் கிடந்த கவர் ஒன்றில் 45 சவரன் தங்க நகைகளை அவர் கண்டெடுத்தார். அந்த நகைகளை அவர் உடனடியாக பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
ஏழ்மையான நிலையிலும் தூய்மை பணியாளர் பத்மாவின் இந்த நேர்மையான செயல் மக்கள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பத்மாவின் நேர்மையை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு நேரில் அழைத்து இன்று பாராட்டினார். அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் டாலருடன் தங்க செயின் ஒன்றை பத்மாவுக்கு அன்பளிப்பாக பரிசளித்தார். மேலும் பத்மா மற்றும் அவரது குடும்பத்துடன் அவர் உரையாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…