#image_title
பிரபல நடிகர் எம்.ஆர் ராதாவின் மகன் தான் ராதா ரவி. இவர் 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். முன்னதாக பல நாடகங்களில் ராதாரவி நடித்துள்ளார். இதனை அடுத்து டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து உயர்ந்த உள்ளம், சின்னத்தம்பி, வைதேகி காத்திருந்தாள், உழைப்பாளி, குரு சிஷ்யன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். வீரன் வேலுத்தம்பி படத்தில் ராதாரவி ஹீரோவாக நடித்தார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரைகளும் ராதாரவி தடம் பதித்துள்ளார். ராதாரவி சகோதரியான ராதிகா செல்லமே என்ற சீரியலை தயாரித்தார்.
இந்த சீரியலிலும் அன்பே வா சீரியல் ராஜா ரவி நடித்தார். இந்த நிலையில் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் அதிமுக கட்சியில் இணைந்து தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்தேன். மீட்டிங்கில் கலந்து கொண்டேன். அதிமுக கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவேன். மீட்டிங் முடிந்த பிறகு சாலை ஓரங்களில் காரை நிறுத்திவிட்டு கட்சிக்காரர்களுடன் மது அருந்தும் பழக்கம் எனக்கு இருந்தது.
இது எப்படியோ ஜெயலலிதா அம்மாவிற்கு தெரிந்து விட்டது. ஒரு நாள் அவர் என்னை அழைத்து சாலையோரம் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் மது குடிப்பது பற்றி கேட்டார். நானும் ஆமாம் என ஒப்புக்கொண்டேன். நீங்கள் என்னை குடும்பத்தில் ஒருவர் என சொன்னீர்கள் அப்படி நினைப்பது உண்மையாக இருந்தால் இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என சொன்னார். அதோடு மது குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன் என ராதாரவி கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…