Connect with us

CINEMA

மயிலாடுதுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரசாந்த்… வளைத்து வளைத்து selfie எடுத்துக் கொண்ட ரசிகர்கள்…. இதோ வீடியோ…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். கடந்த சில வருடங்களாக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சரியாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மேலும், இவரது உடல் எடையும் தாறுமாறாக ஏறியதை அடுத்து அதுவும் இவரது சினிமா பயணத்திற்கு முட்டு கட்டையாக அமைந்தது.

   

இந்நிலையில், படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது திரையுலகில் கால் பதித்து கலக்கி  வருகிறார்.  தற்பொழுது நடிகர் பிரசாந்த் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இந்த ஸ்தலத்தில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்

அதனால் நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ஜி தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி‌.ஜி தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் குடும்பத்தினருடன் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், சுவாமி, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்,

காலசம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி‌ அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு  பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். முன்னதாக காமெடி நடிகர் தியாகு தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்து இருந்தார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top