Categories: சினிமா

விஜய் பட வாய்ப்பையே தூக்கி எறிந்த பிரபல இளம் நடிகர்… தன் கேரியரை பாதுகாக்க தளபதியே ஒதுக்கிய அந்த நடிகர் யார் தெரியுமா..!

Spread the love

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பட்டித் தொட்டி எல்லாம் ஹிட்டான படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் சைமா வழங்கும் அறிமுக இயக்குனர்களுக்கான விருதை வென்று தமிழ் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காகவும் சைமா வழங்கும் அறிமுக நடிகருக்கான விருதை அவர் பெற்றார். இரண்டு திரைப்படங்கள்தான் இயக்கி இருக்கிறார் என்றாலும் இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் டிராகன்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க கவிதாக்கியுள்ளார். இப்படியான நிலையில் பிரதீப் ரங்கநாதன் குறித்து வலைப்பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிவகார்த்திகேயன் அளவுக்கு பிரதிப் ரங்கநாதனுக்கு சினிமாவில் அதிக பிரஷர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டிராகன் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் தன்னை பலர் நசுக்குவதாகவும் மிரட்டுவதாகவும் சில வார்த்தைகளை பேசி இருந்தார். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்போது இப்படியான சவால்களை எல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். சினிமாவை பொறுத்த வரைக்கும் அன்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் திரைப்படம் மூலம் இரண்டாவது வெற்றியை கொடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுப்பார். விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதன் இயக்க வேண்டிய படம் தான்.

முதலில் அவரை அழைத்து தான் ஏஜிஎஸ் நிறுவனம் விஜயிடம் கதை சொல்லிட்டு வாங்க நாம்ப இணைந்து படம் பண்ணலாம் என்று அழைத்தார்கள். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இப்போ மக்கள் எல்லாரும் என்னை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இப்படியான சூழலில் படம் இயக்க நான் வந்து விட்டால் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக வரும்போது என்னை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான்கு ஐந்து வருடங்கள் சென்ற பிறகு வேண்டுமானால் எனக்கு தோன்றினால் இயக்க வருகிறேன் என்று பதில் அளித்துள்ளார். மிகப்பெரிய நடிகர் விஜயின் படத்தை இயக்கவே மறுத்துவிட்ட பிரதீப் ரங்கநாதன் சினிமாவில் எப்படிப்பட்ட உயரத்தையும் அடைந்து விடுவார் என்று அந்த நான் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago