நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். தமி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன். 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார் நெப்போலியன். இதற்குப் பிறகு நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். 2000 கால கட்டத்திற்கு பிறகு கூட குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் நெப்போலியன்.
நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை நார் வளர்ச்சி நோய் இருந்தது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு சிகிச்சை செய்து தற்போது அமெரிக்காவில் மகனுக்காக செட்டிலாகி இருக்கிறார் நெப்போலியன். சில மாதங்களுக்கு முன்பாக அவரது மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார் நெப்போலியன். இவரது மகனின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில் நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டியில், எஜமான் திரைப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னப்போ ரஜினிகாந்த் வேண்டாம் என்று சொல்லி உள்ளார். காரணம் என்னவென்றால் வயசுல ரொம்ப சின்ன பையனா இருக்கவங்கள என்கூட நடிக்க போட்டா எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகும் என்று கேட்டுள்ளார். அப்போதுதான் இயக்குனர் எம்ஜிஆர் ஓட நம்பியார் வயசுல சின்னவர் தான் இருந்தாலும் அவருக்கு அப்பாவா நடிக்கலையா. அது மாதிரி நெப்போலியன் வயசுல சின்னவரா இருந்தாலும் உங்க கூட நடிக்கிறதுக்கு அவர்தான் கரெக்டாக இருப்பார் என்று கூறிய பிறகு தான் ரஜினி ஒப்புக்கொண்டாராம்.
எஜமான் படத்துல கூட இன்னும் கூட வயசுல நான் பெரியவன்டா என்ற வசனம் வரும். உண்மையிலேயே ரஜினிகாந்த் சார் கூட அந்த படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோசம். அதன் பிறகு தயக்கத்தோடு அந்த படத்தில் என்னுடன் நடித்த ரஜினியின் டப்பிங் எல்லாம் முடித்த பிறகு படத்தை பார்த்துட்டு ரொம்ப நல்லா நடிச்சு இருக்கீங்க உங்கள நான் வேண்டான்னு சொல்லிட்டேனே என்று வருத்தப்பட்டு என்ன ரொம்ப பாராட்டினாரு. அப்படிலாம் இல்ல சார் உங்க கூட நடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம் என்று அவர்கிட்ட நானும் கூறினேன் என நெப்போலியன் பேசியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…