நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் எதிர்நீச்சல் தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். நடிகர் மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர்களான வசந்த், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் பரியேறும் பெருமாள், சண்டைக்கோழி, வாலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அவரது தாய் கூறியதாவது, கஷ்டப்பட்டு படித்த மாரிமுத்து சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்தார். பல்வேறு இன்னல்களைக் கடந்து சினிமாவில் நடிகர் மாரிமுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற மாரிமுத்து தனது தாயை சந்தித்து மெட்ராசுக்கு வருமாறு அழைத்தார். தான் கட்டி வரும் புது வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். தனது மகன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை கேட்ட மாரிமுத்துவின் தாய் கடைசியாக மெட்ராசுக்கு வா ஆத்தா என ஆசையாக கூப்பிட்ட தனது மகன் இல்லாமல் போனதை நினைத்து அழுதார்.
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…