#image_title
‘கோகுலம்’ எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயராம். இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தவகையில் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும், ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில், ஜெயராம் மற்றும் கார்த்தியின் காம்பினேஷன் சீன்கள் பலவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. நடிகர் ஜெயராம், 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர் பிரபல நடிகையாக வலம் வந்தவர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் ஜெயராமின் மகன், இளம் நடிகர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர் பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் கூட மிரட்டலான கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
தற்பொழுது நடிகர் ஜெயராமின் மகளான மாளவிகாவிற்கு நிச்சயம் முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…
பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…