CINEMA
‘கேப்டன் மில்லர்’ படம் குறித்து தனுஷ் வெளியிட்ட சூப்பரான அப்டேட்.. ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார் .
தற்போது இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 1930கள் சார்ந்த கதைக்களமாகும். தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் நடித்த சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பான் இந்தியா நாயகனாக மாறிவிட்ட தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள ஆக்டர் விநாயகன் வில்லன் ரோலில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக பைக்கின் மீது கெத்தாக படுத்துக் கொண்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். இதோ அந்த பதிவு..
View this post on Instagram