#image_title
2003 இல் வெளியான ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாலா. ‘தவமின்றி கிடைத்த வரமே’ பாடலாலும், வடிவேலுவின் காமெடியாலும் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது . அன்பு படத்தை தொடர்ந்து தமிழில் இவர் காதல் கிசுகி,சு கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை.
இதை தொடர்ந்து 2006 இல் வெளியான கலாபம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தற்பொழுது இவர் அதிகம் மலையாள திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்ணன் சிவா இயக்கிய ‘வீரம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் நடிகர் பாலா. இவர் 2010 இல் அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2019ல் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து 2021ல் எலிசபெத் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா. இவரது முன்னாள் மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாலா, இசையமைப்பாளர் கோபி சுந்தர் குறித்து கோபமாக பேசியுள்ளார். அதில் தன் மனைவியை தன்னிடமிருந்து பிரித்தது கோபி சுந்தர் தான் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘அம்ருதா சுரேஷை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டது உண்மை. அவரை சட்டபடி விவாகரத்து செய்ததும் உண்மை . ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்கும் தெரியாது.
இது எல்லாவற்றுக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம். அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள் என எல்லாமும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை. உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.
எனது மகளை கூட பார்க்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். இவர்கள் கொடுத்த டார்ச்சரால் நான் தற்கொலை வரை சென்று உயிர் பிழைத்தேன்.” என்று கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பேட்டியானது மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…