#image_title
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பாக்கியராஜ். இவர் 1979இல் வெளிவந்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டவர்.
இவர் தயாரிப்பில் முதன்முதலாக வெளிவந்த படம் ‘ஒரு கை ஓசை’. இவர் இறுதியாக தனது மகனை வைத்து’ சித்து +2′ என்ற படத்தை இயக்கியிருந்தார். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
ஆனால் இவர் 1981 நடிகை பிரவீனா என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரவீனா மஞ்சள் காமாலையால் இரண்டே வருடங்களில் உயிரிழந்தார். இதன் பிறகு தான் நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாக்கியராஜ்.
தன்னுடைய முதல் மனைவியை நினைவாக பாக்கியராஜ் அவர் கொடுத்த மோதிரம் ஒன்றை தற்பொழுதும் அணிந்து கொண்டுள்ளார். அதுபோல பிரவீனாவின் புகைப்படம் பாக்யராஜ் அலுவலகத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது நடிகர் பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீனா புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#image_title
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய்யின் பதவியேற்பு விழா சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் திரைத்துறையைச்…
சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் கோகுல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட…
தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நடிகர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதிமுக…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜமுக்குட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், விவசாயியுமான சத்தியசீலன் (45) என்பவர் மர்மமான முறையில்…