#image_title
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படத்தில், அவர் கேமியோ ரோலிலும் நடித்திருக்கிறார்.
இந்த படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல விஷயங்களை ரஜினிகாந்த் இந்த விழா மேடையில் பேசினார். மேலும் ரஜினி மகள் ஐஸ்வர்யா, என் அப்பாவை சிலர் சங்கி என அழைக்கின்றனர். அவர் சங்கி அல்ல என்றும் பேசியது பயங்கர வைரலானது. ஆனால் அதே வேளையில் ரஜினி இந்த விழாவில் கலந்துக்கொண்டதே இப்போது பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.
இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி, சமீபத்தில் இலங்கையில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இலங்கையில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட அவரது உடல், அஞ்சலிக்காக இளையராஜா வீட்டில் வைக்கட்டிருந்த அந்த நேரத்தில், ரஜினிகாந்த் அந்த லால் சலாம் பட விழாவில் கலந்துக்கொண்டு இருக்கிறார்.
இதற்கும் இளையராஜாவின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த், சாமி, கடவுள் என்றுதான் அவரை ரஜினி அழைக்கிறார். இப்படி தனக்கு மிகவும் வேண்டிய ஒருவரது வீட்டில், அன்பு மகளை இழந்து தவிக்கிற அந்த சூழலில் ரஜினி விழாவில் கலந்துக்கொண்டது சரிதானா என்பது இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுகுறித்த வீடியோ வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இளையராஜாவின் அன்பு மகள், செல்லமகளின் சடலம், இளையராஜா வீட்டில் இருக்கும்போது ரஜினி இந்த விழாவில் கலந்துக்கொண்டிருக்கிறார். ஒரு வீட்டில் இப்படி துக்க சம்பவம் நடந்தால் அருகில் 3 வீதிகளில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.
சமைத்து கொடுப்பார்கள். இதுதான் தமிழர் பண்பாடு. நாகரிகம். ரஜினி உண்மையில் தமிழர்தானா, அல்லது சும்மா நடிக்கிறாரா, இளையராஜாவிடம் பழகிய நட்பும் நடிப்புத்தானா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…