“என்னைத் தேடி வந்த வாராஹி அம்மன்!” – ஆன்மீக ரகசியத்தை உடைத்த ஸ்ருதி ஹாசன்… ரசிகர்களே வியந்துபோய்ட்டாங்களே…!

Spread the love

சினிமா, இசை என பன்முகத்திறமை கொண்ட கலைஞர் ஸ்ருதி ஹாசன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆன்மீகத் தேடல் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாக அறிமுகமானாலும், ‘ஏழாம் அறிவு’, ‘3’ போன்ற படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் அவர். நடிப்பைத் தாண்டி இசையில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதி, சமீபத்தில் வெளியான ‘பவழ மல்லி’ பாடல் வரை தனது கலைப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும், எதற்கும் அஞ்சாமல் தனது பாதையில் முன்னேறி வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தன்னை ‘அம்மா’ என்று அழைத்த நபரிடம் அவர் காட்டிய ரியாக்‌ஷன் சமூக வலைதளங்களில் வைரலானது. எதார்த்தமான குணமும், மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் சுபாவமும் ஸ்ருதி ஹாசனை மற்ற நடிகைகளிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது.

தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ட்ரெய்ன்’ திரைப்படத்தில் நடித்து வரும் அவர், முதன்முறையாகத் தனது ஆன்மீக அனுபவம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “நாம் மட்டும் கடவுளைத் தேர்ந்தெடுப்பதில்லை, கடவுளும் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது வாழ்வில் வாராஹி அம்மனின் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நவீனச் சிந்தனை கொண்டவராக இருந்தாலும், இந்த ஆன்மீகப் பிணைப்பு தனக்கு மிகுந்த மன அமைதியைத் தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் வாராஹி அம்மன் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன், “ஆடம்பரமோ, விஐபி வரிசையோ, நன்கொடை கட்டாயமோ இல்லாத அந்தச் சிறிய கோயிலில் உண்மையான பக்தியை உணர்ந்தேன்” என்று நெகிழ்ந்துள்ளார். வாராஹி அம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்பதைத் தான் மனதார நம்புவதாகவும், அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் எமோஷனலாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“அம்மாவை விட்ருப்பா…” கதறிய சிறுவன் பிணமான சோகம்… 10 வயது சிறுவன் துடிதுடிக்கக் கொலை! ஓமலூரில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…

4 minutes ago

“தினமும் எவன் கூட டி வீடியோ கால் பேசுற”… மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த அந்த சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

7 minutes ago

ஏஜென்டிக் ஏஐ (Agentic AI): “சாதாரண AI அல்ல, இது தானாகவே ஆட்சி செய்யும்”… UAE அரசின் திடீர் அறிவிப்பு.. 2 வருடத்தில் தலைகீழாக மாறப்போகுது…!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…

13 minutes ago

இடியைத் தூக்கி போட்ட ட்ரம்ப்… ஒரே ஒரு ட்வீட்.. ஆட்டம் கண்ட ஈரான்… ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட ‘ஸ்கெட்ச்’…!

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…

17 minutes ago

இந்தியாவில் “ஸ்பெஷல்” ஆபரேஷனை நடத்தும் இஸ்ரேல்… 5000 வாரிசுகள், 2,700 ஆண்டுகால ரகசியம்…. ‘ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான்’ பின்னணி…!

மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…

21 minutes ago

BREAKING: “ஐந்து பிஞ்சுகள் சிதைக்கப்பட்ட கொடூரம்”… சிவகங்கை விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை… அதிரடி தீர்ப்பு…!

சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…

29 minutes ago