CINEMA
என்னப்பா சொல்ரீங்க.. சரத்குமாருக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சனை வர அந்த நடிகை தான் காரணமா..?
இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன்களில் அஜித்தும் ஒருவர். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.
இந்நிலையில் அப்போது சிங்கிளாக இருந்த நடிகர் சரத்குமாரும் ஹீராவை ஒருதலையாக காதலித்ததாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. இது சம்மந்தமாக அஜித்துக்கும் சரத்குமாருக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.
இந்நிலையில் சரத்குமாரை வெறுப்பேற்ற வேண்டுமென்று நினைத்த அஜித், ஹீராவை தன் உட்காரவைத்துக் கொண்டு சரத்குமார் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே சென்றுவிட்டாராம். அஜித்தையும் ஹீராவையும் ஒன்றாக பார்த்த சரத்குமார் அப்செட் ஆகி அன்று ஷூட்டிங்கையே கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்குப் போய் விட்டாராம்.
இதே போல அஜித் ஹீராவுடனான காதலின் போது ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ளாமல் சில படங்களில் இருந்து வெளியேறியுள்ளார். அப்படி அவர் வெளியேற்றப்பட்ட படம்தான் நேருக்கு நேர். அந்த படத்தில் 10 நாட்கள் நடித்த அஜித், அதன் பின்னர் அந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னத்தால் நீக்கப்பட்டுள்ளார்.
இப்படி உருகி உருகி காதலித்த ஹீரா- அஜித் காதலும் ஒன்றுசேரவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிர்ந்தனர். ஹீரா இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அஜித் அதன் பின்னர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார் என்பதெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே.