CINEMA
“அப்டி பேசறவங்கள நாக்குல சூடு போடணும்”.. நேரலையில் ஆவேசப்பட்ட பாடகி சின்மயி..
தமிழ் சினிமாவில் ஒரு பாடகியாக, நடிகைகளுக்கு பின்னணி குரல் தரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பவர் சின்மயி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் சின்மயி கூறியதாவது, நான் ஏ ஆர் ரகுமானை ஒரு குரு ஸ்தானத்துல வெச்சிருந்தேன்.
அதே போல வைரமுத்துவை சினிமாவில் எவ்வளவு பெரிய ஜாம்பவான், எழுத்தாளர், வீட்டில் ஒரு பெரிய மனிதர், பெரிய கவிஞர் என்றெல்லாம் மரியாதையான ஒரு இடத்தில் வைத்தேன். அதை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு அவரை அவரே அசிங்கப்படுத்திக்கொண்டார். இது அவருடைய தவறு. அவரை பற்றிய உண்மையை சொன்ன என் மீது தவறு கிடையாது.
நான் மீ டூவில் சொன்னது கொஞ்சம்தான். ஆனால் மீ டூ வில் விமர்சிக்கப்பட்டவர்கள், அதன் மூலம் வெளியே வந்தவர்கள் எல்லாம் இன்னும் திருந்தவில்லை. இன்னும் அப்படியே தான் இருக்கின்றனர். நான் உண்மைதான் சொல்கிறேன் என்பதற்கான சர்டிபிகேட் எல்லாம் எனக்கு தேவையில்லை.
தப்பு செய்தவனை விட்டுவிட்டு என்னை ஏன் போட்டு புரட்டி புரட்டி அடிக்கறீர்கள் என்றுதான் கேட்கிறேன். தப்பு செய்தவனை கொஞ்சிகிட்டு, அவனுக்கு மரியாதை தந்து மகுடம் சூட்டுகிறீர்களே, நீங்கள் எல்லாம் பெண்ணியம், பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பு என்றெல்லாம் பேசினால், நாக்கில் சூடு போடணும் என்றுதான் தோன்றும்.
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் தவறு செய்தவனை விட்டுவிட்டு, அவர்கள் செய்த தவறை சொன்ன எங்களை தான் தவறாக பேசுகிறார்கள். எங்கள் மீதுதான் கோபப்படுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், நிறைய வருத்தப்பட்டு இருக்கிறேன். அழுதிருக்கிறேன்.
இது என்னடா வாழ்க்கை என்று நொந்து போயிருக்கிறேன். மனிதர்களிடம் உண்மையான நியாயம், தர்மம் எல்லாம் கிடையாது. இந்த சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது, என்று தனது வருத்தங்களை கொட்டித் தீர்த்திருக்கிறார் பாடகி சின்மயி.