#image_title
இன்று உலகத்தின் கவனம் முழுவதும் அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஏனென்றால் அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்து டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார். டொனால்ட் ட்ரம்புக்கு பக்க பலமாக முழு ஆதரவையும் அளித்தவர் எலன் மஸ்க். இந்த எலன் மஸ்க் யார் எங்கிருந்து வந்தார் உலகின் பணக்காரராக எப்படி ஆனார் என்பது பற்றி இனி காண்போம்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் எலன் மஸ்க். தனது சகோதரருடன் இணைந்து வீடு வீடாக வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் ஈஸ்டர் முட்டைகளை விற்பனை செய்தவர். 12 வயது ஆகும்போது எலன் மஸ்க்கு கணினி மீதான ஆர்வம் ஏற்பட்டது.
ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பை படித்த எலன் மஸ்க் இணையம் தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சியை மையமாக வைத்து 1990களில் இரண்டு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை நிறுவினார். அதில் ஒன்று PayPal என்ற நிறுவனம் மற்றும் epay என்பதாகும். 2002 இல் இந்த இபேயை 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றார்.
இந்த விற்கப்பட்ட பணத்தை முதலீடாக வைத்து புதிய ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் முதலீடு செய்தார் எலன் மஸ்க். அதுமட்டுமில்லாமல் புதிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவிலும் தனது பணத்தை முதலீடு செய்தார். 2008 ஆம் ஆண்டு டெஸ்லாவின் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார் எலன் மஸ்க்.
படிப்படியாக தனது தொழிலை முதலீடு செய்வதன் மூலம் உயர்த்திய எலன் மஸ்க். 2022 ஆம் ஆண்டு சமூக ஊடக தளமான ட்விட்டரை வாங்கி எக்ஸ் என்று பெயரிட்டார். செயற்கை நுண்ணறிவு துறையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்தார் எலன் மஸ்க். மேலும் Chargpt OpenAI இன் ஆரம்பகால முதலீட்டாளராக எலன் மஸ்க் இருந்தார். இப்படி தனது அறிவையும் உழைப்பையும் மூலதனமாக வைத்து உயர்ந்த எலான் மஸ்க் 25 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கிறார். உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார் எலன் மஸ்க். டொனால்டு டிரம்ப்க்கு தேர்தல் நிதிக்காக 600 கோடி ரூபாய் நிதி அளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக எலான் மஸ்க்கு டொனால்ட் டிரம்ப் தனது அரசவையில் ஒரு பதவியும் வழங்கி இருக்கிறார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…