Categories: சினிமா

பருத்திவீரன் பட விவகாரம்.. 17 வருடமாக நடக்கும் Case.. அறிமுகம் செய்தவரை கண்டுகொள்ளாமல் நன்றி மறந்த கார்த்தி..

Spread the love

நடிகர் கார்த்தி, சமீபத்தில் சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் கார்த்தி 25 என்ற விழாவை கொண்டாடினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பருத்திவீரன் என்ற படத்தில், அறிமுகமானார் கார்த்தி. இவரது தந்தை சிவக்குமார், தமிழ் சினிமாவில் மிக பிரபலமான சீனியர் நடிகர். இவரது அண்ணன் சூர்யாவும், அப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்தார்.

அப்போது பருத்திவீரன் என்ற முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக தன்பக்கம் திரும்பி, அனைவரது கவனத்தையும் பெற்றார் கார்த்தி. காரணம், படத்தின் கதைக்களம், நடிப்பு, படத்தின் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் கார்த்தியை, பருத்திவீரன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம், அந்த படத்தின் டைரக்டர் அமீர். ஆனால், இந்த கார்த்தி 25 விழாவுக்கு, அமீரை அழைத்து கவுரப்படுத்த, நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார் கார்த்தி.

இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில், இயக்குநர் அமீர் கூறியதாவது, அந்த விழாவுக்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை. பி.ஆர்.ஓ., மேனேஜர் போன்றவர்கள் போனில் அழைத்தால், அப்படி அந்த விழாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில், இடத்தில் நான் இல்லை.

 

பருத்தி வீரன் படம் தயாரிப்பு சம்பந்தமாக, தயாரிப்பாளருக்கும், எனக்கும் 17 ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு நடப்பதே பலருக்கு தெரியாது. கடந்த மாதம் கூட, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நான் மட்டும் கோர்ட்டில் நேரில் சென்று ஆஜராகி விட்டு வந்தேன். தயாரிப்பு தரப்பில் இருந்து, அவர்கள் யாரும் ஆஜராவது இல்லை.

இதுதான் உண்மையான நிலவரம். இப்படிப்பட்ட சூழலில் அந்த விழாவில் நான் கலந்துக்கொள்ள முடியாது. யாரோ மூன்றாம் நபர் கூப்பிட்டு அந்த விழாவுக்கு போய் நின்று, யாரையும் வாழ்த்த வேண்டிய நிலை இல்லை. பருத்தி வீரன் தயாரிப்பு குறித்த வழக்கு நடக்கிற உண்மையே பலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன், என கூறி இருக்கிறார் இயக்குநர் அமீர்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago