உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார்? இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம் என பழமொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 1960-ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்திற்காக அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து 1962-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். கமல் நடிகனாக மட்டுமின்றி பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக விளங்குகிறார். ஹேராம் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இயக்குனராகவும் நல்ல வரவேற்பை பெற்றார். கமல்ஹாசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என கூறலாம்.
களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன் இந்தியன் ஆகிய படங்களுக்காக கமல்ஹாசன் இந்திய அரசின் தேசிய விருதுகளையும், 18 பிலிம்பேர் விருதுகளையும், ஸ்ரீ விருது, சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கமல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சூர்யா, ஆமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…