ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளையும் மூட கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி எடுத்த முடிவை சிவசேனா (UBT) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகக் கூறிய அவர், உணவுத் தேர்வுகள் மதம் அல்லது தேசிய நலன் சார்ந்த விஷயம் அல்ல என்று வலியுறுத்தி, அத்தகைய கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள நியாயம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும் “எங்கள் வீட்டில், நவராத்திரி அன்று கூட, எங்கள் உணவில் இறால், மீன் இருக்கும், ஏனென்றால் இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் இந்து மதம். இது மதம் சார்ந்த விஷயம் அல்ல. இது தேசிய நலன் சார்ந்த விஷயம் அல்ல. சுதந்திர தினத்தன்று நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது நமது உரிமை, நமது சுதந்திரம். சைவம் சாப்பிடுவதா? அல்லது அசைவம் சாப்பிடுவதா? என்று அவர்களால் சொல்ல முடியாது. நாங்கள் நிச்சயமாக அசைவம் சாப்பிடுவோம் ” என்று குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு பிறப்பித்ததற்கு கல்யாணில் உள்ள அரசியல் தலைவர்களும் உள்ளூர் இறைச்சி விற்பனையாளர்களும் கடும் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…