செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26) என்பவர் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் என்பவரைக் கொலை செய்து புதைத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார். இன்று நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு பைபாஸ், பழவேலி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரைச் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு அக்கூட்டம் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த வீர முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷ் கொலையினைக் பழிவாங்கும் நோக்கில், நீதிமன்ற வளாகத்தில் இருந்தே திட்டமிட்டுப் பின்தொடர்ந்து வந்து இக்கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தப்பியோடிய 6 பேரையும் தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…