திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாக்குதலில் இருந்து தப்பிக்க கொஞ்சம் தூரம் ஓடிய காவலர் தன்னுடைய இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் கத்தியால் குத்தாமல் தற்காத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மிரட்டி அச்சுறுத்திய அந்த நபரை, மற்ற காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட இளைஞர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழா காலத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…
இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…
தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…
பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…
வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…