காட்டிலிருந்து ஒரு புலி வேகமாக ஓடிவந்து தன் பராமரிப்பாளரைக் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவது போன்ற இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. லினேசியா யுஎஸ்ஏ (@lenasiausai) என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 5.7 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவில் ஒரு நபர் புலியின் பெயரைச் சொல்லி அழைத்ததும், அது ஓடிவந்து அவர் மீது பாய்ந்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு அன்பை பொழிவது போலக் காட்டப்பட்டுள்ளது, இது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DZnTWZns4kM/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இருப்பினும், இந்த வீடியோ முற்றிலும் உண்மையானது அல்ல, இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ ஆகும். சுமார் 150 முதல் 300 கிலோ எடையுள்ள ஒரு புலி திடீரென மனிதன் மீது பாய்ந்தால் அந்த நபர் கீழே விழுந்துவிடுவார், ஆனால் வீடியோவில் அவர் அசையாமல் நிற்கிறார். மேலும், புலியின் ஓட்ட அசைவுகள் இயற்கையாக இல்லை என்றும், புலியின் நாக்கு மிகவும் சொரசொரப்பாக இருப்பதால் அது நக்கினால் மனித தோலில் காயம் ஏற்படும் என்றும் நெட்டிசன்கள் இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…