நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் மற்ற அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு சிறிய பச்சை நிற வீடு மட்டும் எந்தவித சேதமுமின்றி தப்பியது வெறும் அதிர்ஷ்டத்தால் அல்ல என்று கட்டுமான நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெறும் கற்களைக் கொண்டு மட்டுமே கட்டப்பட்டவை என்பதால், பக்கவாட்டில் வரும் நீரின் வேகத்தை தாங்க முடியாமல் எளிதில் சரிந்துவிடுகின்றன. ஆனால், இந்த பச்சை நிற வீடு வலுவான கான்கிரீட் கட்டமைப்பில் தூண்கள், பீம்கள் மற்றும் அடித்தளம் ஆகியவை இரும்பு கம்பிகளால் முறையாக இணைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது இதன் முதல் பலமாகும்.
இந்தக் கட்டிடம் வெள்ளத்தின் பிரதான பாதையில் நேரடியாக அமையாமல், சற்று விலகியும் உயரமான பகுதியிலும் அமைந்திருந்தது அதன் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தியது. இதனால் வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகளும் தண்ணீரும் வீட்டின் மீது நேரடியாக மோதாமல் இருபுறமும் பிரிந்து சென்றன. மேலும், வீட்டின் சிறிய அளவும் நீரின் ஓட்டத்தை எளிதில் திசைதிருப்ப உதவியாக இருந்ததுடன், வீட்டைச் சுற்றி படிந்த சேறுகூட அடுத்தடுத்த வெள்ள அலைகளின் தாக்கத்தைத் தடுக்கும் இயற்கையான அரணாகச் செயல்பட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள போதிலும், முறையான கட்டுமான முறையாலும் அமைவிடத் சிறப்பாலும் மட்டுமே இந்த ஒரு குடும்பம் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தச் சம்பவம், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையிலான அறிவியல் பூர்வமான கட்டுமானங்களின் அவசியத்தை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…