“அந்த ஜிபே நம்பரை கொடுங்க”.. அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய கூத்து.. ஒரே நாளில் 5 பேர் சஸ்பெண்ட்.. திருச்செந்தூர் கோயிலில் நடந்த அதிரடி ட்விஸ்ட்..!!

Spread the love

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் இன்று காலை அதிகாரிகளுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முகக்கவசம் அணிந்து கொண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சண்முக விலாச மண்டபம் அருகே இருந்த அர்ச்சகர் ஐயப்பனிடம் சுவாமி தரிசனக் கட்டணம் குறித்து அமைச்சர் விசாரித்துள்ளார். 4 பேருக்குத் தலா ₹1000 வீதம் மொத்தம் ₹4000 பணத்தை ஒரு ‘ஜிபே’ (GPay) எண்ணிற்கு அனுப்புமாறு அந்த அர்ச்சகர் கூற, அமைச்சரும் அந்தப் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னரே அவர் ஆய்வுக்காக வந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவந்தது.

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யப் பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பது கறாராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் அர்ச்சகர்கள் மட்டுமின்றி சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கூட்டுச் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கக் கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அன்னதானக் கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த அதிரடி ஆய்வின் விளைவாக, அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்காக ₹4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் ஐயப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட இரண்டு வாயில் காவலர்கள் (Security Guards) என மொத்தம் மூன்று பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை ஐயப்பன் கோயிலில் பூஜை செய்யத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பக்தர்களிடம் முடிகாணிக்கை பெறுவதற்குக் கூடுதலாக லஞ்சம் கேட்ட குற்றத்திற்காகக் கோயிலின் மேலும் இரண்டு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

7 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

13 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

19 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

31 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

37 minutes ago

BREAKING: திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…

40 minutes ago