“பரிசுப் பொருள் எதுக்கு? நோட்டுப் புத்தகம் கொடுங்க!”.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கிய தவெக அமைச்சர்… வைரலாக பதிவு..!!

Spread the love

தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று 3 வாரங்கள் நிறைவடையும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அமைச்சர்களின் ரீல்ஸ் மோகப் புகார்களுக்கு மத்தியில், அக்கட்சியின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எடுத்துள்ள புதிய முயற்சி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து, கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வென்ற 38 வயதான விக்னேஷுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த மதுவிலக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர் விக்னேஷ் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலை, சால்வை, பூங்கொத்து மற்றும் ஆடம்பரப் பரிசுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; அதற்குப் பதிலாக நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறு சேகரிக்கப்படும் எழுது பொருட்கள் அனைத்தும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அவர்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தவெகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்தால் ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், விதியை மீறும் 11 to 11 மனமகிழ் மன்றங்களுக்கு (Clubs) நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் முன்னிறுத்திய ‘டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ₹10 கூடுதல் கட்டணம்’ பெறும் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் விக்னேஷ், இந்த முறையை உடனடியாக மாற்ற முடியாது என்றாலும், விரைவில் இந்த லஞ்ச நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…

7 minutes ago

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

9 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

13 minutes ago

“2 வருடங்களில் CM… அடுத்தது PM?”…. திமுக, அதிமுகவுக்கு ஷாக்… 2029 பிரதமர் ரேஸில் விஜய்?…. காங்கிரஸை அலறவிடும் தவெக கணக்கு….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…

18 minutes ago

திமுகவை விட்டு வந்ததே தப்பா போச்சு?… குரலை இழந்த காங்கிரஸ், விசிக – தவெக கூட்டணியில் நடப்பது என்ன?…. அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்…!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…

26 minutes ago

நள்ளிரவில் மர்மம்…! தாயின் சடலத்தை தோண்டி எடுத்து கடத்திய மகன்கள்… நடந்தது என்ன…? கர்நாடகாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில்,…

28 minutes ago