Categories: CINEMA

எல்லாம் தப்பு தப்பா பேசுறீங்க.. என் அக்கா ஜீவா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.. பவதாரணியின் தாய் மாமா உருக்கம்..

இளையராஜாவின் மூத்த மகள் பவதாரணி, சில தினங்களுக்கு முன் கல்லீரல் புற்றுநோயால் இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, இளையராஜா வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டு அதன்பின் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில், அவரது அம்மா ஜீவா, பாட்டி சின்னத்தாயி ஆகியோர் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பவதாரணியின் திடீர் மறைவு இளையராஜா, கங்கை அமரன் மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக, வேதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜாவின் மனைவி ஜீவாவின் தம்பி, பவதாரணியின் தாய்மாமா மூர்த்தி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, எங்கள் குடும்பத்தை பொறுத்த வரை ஜீவாம்மாவுக்கு அடுத்த இடத்தில் பவதாம்பா இருந்தார். அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை மற்றவர்களிடம் அவர் ஷேர் பண்ணாமல் விட்டுவிட்டார். எல்லோருமே பிஸியான ஆட்களாக அடுத்தடுத்த வேலைகளில் இருந்ததால், அதை அவரால் சொல்ல முடியவில்லை.

எனக்கு பவதாவின் கணவர் சபரி போன் செய்து சொன்ன போது கூட இது ஆரம்ப நிலையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இறுதிகட்டத்தில் நோய் முற்றிவிட்டது என்பதுதான் பிறகுதான் தெரிந்தது. ஆனால் எங்கள் அக்கா ஜீவாம்மா இருந்திருந்தால், பவதாம்மா இப்படி சீக்கிரமாக இறந்திருக்க மாட்டார். எப்படியாவது எங்க அக்கா, அவரை ஆரம்பத்திலேயே கவனித்து காப்பாற்றி இருப்பார்.

ஊடகங்களில் பவதாம்மா மறைவு குறித்து தப்பா தப்பான விஷயங்களை, தகவல்களை பரப்பி விடுகின்றனர். தவறான விஷயங்களை பப்ளிசிட்டி செய்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது. தெரிந்தால் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். இல்லை என்றால் விட்டுவிட வேண்டும். இப்படி தப்பு தப்பாக விஷயங்களை சொல்லக் கூடாது. பவதா உடலை கடைசியாக எடுக்கும் போது மயில் போல பொண்ணு ஒண்ணு பாட்டை நாங்கள் யாரும் அங்கு திட்டமிட்டு பாடவில்லை.

தானாகவே அங்கே இருப்பவர்கள் எல்லாம் பாடி விட்டனர். இளையராஜாவின் மூத்த மகள் பவதா என்னும்போது இளையராஜால் துக்கத்தை வெளிக்காட்ட முடியாத அளவுக்கு அவர் உடைந்து போயிருந்தார். இறுதியாக, சென்னையில் தான் அவரது உடலை அடக்கம் செய்ய நினைத்தோம். ஆனால், பண்ணைபுரத்தில் ஜீவாம்மா பக்கத்தில் அடக்கம் செய்யலாம் என முடிவு செய்தது இளையராஜா தான். அவர் முடிவுதான் எல்லாம், என்று கூறியிருக்கிறார் பவதாரணியில் தாய்மாமா மூர்த்தி.

Sumathi
Sumathi

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

6 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

6 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

8 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

9 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

11 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

16 hours ago