கிர் மாடு வளர்ப்பில் அதிக லாபம்… மாதம் 2 லட்சம் வருவாய் ஈட்டும் கன்னியாகுமரியை சேர்ந்த நபர்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நன்றாக படித்து ஏசி ரூமில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விவசாயத்தையும் அதை சார்ந்த தொழில்களையும் யாரும் விரும்பவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பார்க்க போனால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களுக்கும் மவுசு அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். சரியான முறையில் செய்யும்போது இதில் வருமானம் ஈட்ட முடியும். அந்த வகையில் மாடு வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வருகிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர். இவர் கிர் மாடு வகையை வளர்த்து வருகிறார். அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

இந்தியாவில் பல்வேறு மாடுகள் இனங்கள் வளர்க்கப்பட்டாலும் கலப்பின மாடுகள் இருக்கிறது. இதில் கிர் மாடு என்பது இந்தியாவின் நாட்டு மாட்டு வகைகளில் ஒன்று. இது உருவில் பெரியதாகவும் மனதர்களிடம் பழகுவதற்கு எளிதாகவும் இருக்கும். இந்த வகை மாடுகள் குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த வகை மாடுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுக்களை கோசலை அமைத்து வளர்த்து வரும் கோலப்பபிள்ளை என்பவர் இந்த கிர் வகை மாடுகளையும் சேர்த்து வளர்த்து வருகிறார்.

இந்த கிர் வகை மாடு வளர்ப்பு பற்றி கோலப்பைபிள்ளை கூறுகையில், நான் மத்திய அரசின் போலீஸ் படையில் உதவி ஆய்வாளராக 30 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறுவயதிலிருந்து மாடுகள் வளர்ப்பதில் அதிக விருப்பம் உண்டு. வட மாநிலங்களில் பணிபுரியும் போது அங்கு கிர் மாடுகளின் பால் உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்ததாகவும் இருக்கும். அதனால் எனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் கிர் மாடுகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து வளர்த்து வருகிறேன்.

தற்போதைய காலகட்டத்தில் மூன்று மாடுகளை வைத்தே மாதம் 50000 வரை வருமானம் ஈட்ட முடியும். மாடுகளை வைத்து தினசரி 500 ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் அதிகம் இருக்கிறது. மாடுகளில் இருந்து பால் மட்டுமே விற்பனை செய்யாமல் பால் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டு சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு ஊதுபத்தி திருநீறு கிருமி நாசினி என பல பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறுகிறார் கோப்பிள்ளை.

மேலும் அவர், நான் வளர்க்கும் கிர் மாடு என்பது மாடுகளின் பெயர் கிடையாது. அது வளர்ந்த கிர்காடுகளின் பெயரை வைத்து கிர் மாடு என பெயர் வந்தது. பண்டைய காலத்தில் ராஜாக்கள் இந்த மாடுகளை தான் போட்டி போட்டு வளர்த்தார்கள். இந்த மாடுகளின் பால் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வந்தார்கள். இது மிகவும் சத்தானது என்று கூறப்படுகிறது. இந்த கிர் மாடுகளின் பால் அவ்வளவு எளிதாக கிடைக்காது. இந்த வகை மாடுகளில் கிடைக்கும் ஏ2 புரோட்டீன் பால் மிகவும் சுத்தமானதாக ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நான் இது போல தான் மாடுகளின் பொருட்களை எல்லாம் சேர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்கிறேன். நான் எனது கோசாலையில் கிர் மாடுகளுடன் 50 பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்று கோப்பிள்ளை தெரிவித்திருக்கிறார். என்னை போல எல்லோரும் இந்த மாடு வளர்ப்பு தொழிலில் தாராளமாக பயப்படாமல் இறங்கலாம் என்றும் அறிவுரை கூறுகிறார்.

admin

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

3 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

3 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

3 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

4 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

4 மணத்தியாலங்கள் ago