உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயிர்களைச் சேதப்படுத்தும் குரங்குகளின் அட்டகாசத்தால் பெரும் அவதிக்குள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வந்து விவசாயிகளின் உழைப்பை வீணடித்து வந்த நிலையில், தர்மபீர் என்ற விவசாயி ஒரு புதுமையான யோசனையைக் கையாண்டுள்ளார். இதற்காக சுமார் 4,000 ரூபாய் செலவில் கரடி போன்ற உடையை வாங்கிய அவர், அதை அணிந்துகொண்டு வயல்வெளிகளில் வலம் வரத் தொடங்கியுள்ளார்.
கரடி வேடமிட்டு வயலில் நடமாடும் தர்மபீரைப் பார்த்து நிஜமான கரடி என அஞ்சி குரங்குகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன. இந்த வித்தியாசமான முயற்சியைப் பின்பற்றி மேலும் சில விவசாயிகளும் தற்போது கரடி உடையணிந்து தங்கள் பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் புத்திசாலித்தனமான மற்றும் வேடிக்கையான ‘ஜுகாட்’ நுட்பம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையவாசிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…