சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வினோதமான புகைப்பிடிக்கும் இயந்திரத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் 12 சிகரெட்டுகளைப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், ஒரு குழாய் மூலம் அனைத்து சிகரெட்டுகளின் புகையையும் நேரடியாக சுவாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விபரீத கண்டுபிடிப்பைக் கண்ட இணையவாசிகள், இது புகைப்பிடிப்பவர்களின் “மகிழ்ச்சி அல்ல, மரணத்திற்கான வழி” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில், “மரணத்துடன் விளையாடும் விளையாட்டு” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், இத்தகைய ஆபத்தான உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். உயிரைக் குடிக்கும் இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்த எந்திரம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…