சாராய்டியோ மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் அரங்கேறியுள்ள கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராபூர் தேயிலைத் தோட்ட ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், அங்கு பயிலும் மாணவர்களை ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில், ஆசிரியர் மாணவர்களை சரமாரியாகத் தாக்குவது மட்டுமின்றி, ஒரு மாணவரை முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீச முயற்சி செய்யும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியரின் இந்த வெறித்தனமான செயலால் மாணவர்கள் உயிருக்கு பயந்து அலறும் காட்சி பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளது. கல்வி கற்கும் இடத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே எமனாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அசாம் தேயிலை பழங்குடியினர் மாணவர் சங்கம் (ATSA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் அந்தச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு (Memorandum) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…