அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே கட்சியின் மிக முக்கியப் பதவியான அவைத் தலைவர் பொறுப்பு, சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனிடம் உள்ள நிலையில், தற்போது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, மாவட்டச் செயலாளர் (மா.செ.) பொறுப்புகளிலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்குப் பிரதிநிதித்துவம் வழங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அனைத்துச் சமூகத்தினருக்கும் சம வாய்ப்பளிப்பதன் மூலமும், விளிம்புநிலை சமூகங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமும், அதிமுகவின் பாரம்பரிய தலித் வாக்கு வங்கியை மீண்டும் வலுவாக மீட்டெடுப்பதே இபிஎஸ்-இன் இந்த அதிரடி அரசியல் வியூகத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…