ராஜஸ்தான் மாநிலம் உதயபூரைச் சேர்ந்த பிராண்ட் மார்க்கெட்டிங் நிபுணரான முத்ரிகா காவ்டியா என்பவருக்கு, தொழில்முறை பயன்பாட்டிற்கான லிங்க்டுஇன் செயலியில் அமெரிக்காவில் PhD படிக்கும் தனது மகனுக்குப் பெண் கேட்டு ஒரு தாய் மெசேஜ் அனுப்பியிருந்தார். இந்த விசித்திரமான சம்பவத்தை முத்ரிகா சோஷியல் மீடியாவில் பகிர, அது காட்டுத்தீ போல வைரலானது.
ஆனால், கதையின் ட்விஸ்ட் இதோடு முடியவில்லை! இந்த பதிவைப் பார்த்த ஆப்பிரிக்காவில் வசிக்கும் மற்றொரு NRI குடும்பம், முத்ரிகாவின் இன்ஸ்டாகிராமிற்கு மெசேஜ் செய்துள்ளது. “எங்கள் மகளும் துபாயில் பைலட்டாக இருக்கிறார்; அந்த PhD பையனின் அம்மாவைத் தொடர்புகொள்ள எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என முத்ரிகாவிடமே வரன் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
தான் அறியாமலே ஒரு ‘திடீர் கல்யாண புரோக்கராக’ ( மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்ரிகா, “இந்த ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்!” எனக் கூறி அந்த மெசேஜைப் பகிர்ந்துள்ளார். லிங்க்டுஇன் தளத்தை திருமண வரன் தளம் போல மாற்றிய இந்த சம்பவமும், முத்ரிகாவிற்கு வந்த மெசேஜ்களும் இணையத்தில் நெட்டிசன்களைச் சிரிக்க வைத்து வைரலாகி வருகிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…