26 வயதான இளைஞர் ஒருவர் குழந்தை இல்லாத பிரச்சினைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றை அணுகியபோது, அவருக்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகள் மருத்துவர்களையும் அவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஆரம்பகட்ட விந்தணுப் பரிசோதனையில் விந்தணுக்கள் முற்றிலும் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில், அவரது இடுப்புப் பகுதியில் கருப்பை மற்றும் கருக்குழாய்கள் போன்ற பெண் உறுப்புகளின் அமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மரபணுப் பரிசோதனையில் அவருக்கு ’46, XY’ என்ற ஆணுக்கான குரோமோசோம்கள் இருப்பது உறுதியான நிலையில், இது ‘பெர்சிஸ்டன்ட் முலேரியன் டக்ட் சிண்ட்ரோம்’ (Persistent Müllerian Duct Syndrome) எனும் மிக அரிய மரபணு குறைபாடு என்பது தெரியவந்தது. கருவில் ஆண் குழந்தை வளரும்போது இயல்பாக மறைய வேண்டிய பெண் உறுப்புகள் மறையாமல் தொடர்ந்து உடலுக்குள்ளேயே தங்கியிருப்பதே இந்நிலைக்குக் காரணமாகும். உலகில் இதுவரை 300-க்கும் குறைவான நபர்களுக்கே இத்தகைய பாதிப்பு பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பிறந்தது முதல் 26 வயது வரை இவரது இரு விதைப்பைகளும் உடலுக்கு வெளியே இறங்காமல் வயிற்றின் உட்பகுதியிலேயே தங்கியிருந்துள்ளன. நீண்ட காலம் வயிற்றுக்குள் இருக்கும் விதைப்பைகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், மருத்துவர்கள் உடனடியாக லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் உடலுக்குள் இருந்த கருப்பை, கருக்குழாய்கள் மற்றும் இரு விதைப்பைகளையும் பாதுகாப்பாக அகற்றினர்.
அகற்றப்பட்ட திசுக்களைப் பரிசோதித்தபோது, அவரது இடது விதைப்பையில் ‘ஜெர்ம் செல் நியோபிளேசியா இன் சிட்டு’ (Germ Cell Neoplasia In Situ) எனப்படும் புற்றுநோயாக மாறக்கூடிய ஆரம்பகட்ட மாற்றங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை இன்மைக்க்கான காரணத்தைக் கண்டறியச் சென்று, உரிய நேரத்தில் இந்த அரிய குறைபாட்டையும், தீவிர புற்றுநோய் அபாயத்தையும் கண்டறிந்து சிகிச்சை பெற்ற இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…