“என் மனைவிக்கு நீதி வேணும்!”.. 6 ஆண்டு கால கொடுமைக்கு எதிராக நின்ற கணவன்.. வாரணாசியில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!

Spread the love

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் கடந்த 2019-ம் ஆண்டு தான் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கணவரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அப்பெண் மைனராக இருந்தபோது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தர்ஷத் பட்டேல் (வயது 60) என்ற முதியவர், அவரை மிரட்டிப் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பயம் காரணமாக இந்த கொடுமையை இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததாக அந்த பெண் தனது கணவரிடம் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் என்று உறுதியுடன் முடிவு செய்தார். உடனடியாக இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தர்ஷத் பட்டேல் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முதியவரை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Muthu Mani

Recent Posts

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

20 minutes ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

27 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

38 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

10 மணத்தியாலங்கள் ago