ஒரு விவசாயி தனது வயலில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்த போது, அங்கு இட்டிருந்த முட்டைகளைக் காப்பாற்ற ஒரு தாய் பறவை காட்டிய பாசப் போராட்டம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மற்றவர்களுக்கு அவை வெறும் முட்டைகளாகத் தெரிந்தாலும், அந்தத் தாய் பறவைக்கு அவைதான் உலகம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
வயலில் உழவுப் பணி நடந்து கொண்டிருந்த போது, டிராக்டர் தனது முட்டைகளை நோக்கி நெருங்கி வருவதை அந்தப் பறவை கவனித்தது. உடனே சற்றும் பயப்படாமல், டிராக்டரின் முன் தன் இறக்கைகளை விரித்து கம்பீரமாக நின்றுகொண்டு, உரத்த குரலில் கத்தியபடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தன் வருங்காலக் குஞ்சுகளின் உயிரைக் காக்க, தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அந்தத் தாய் பறவை காட்டிய துணிச்சல் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குகிறது.
https://www.instagram.com/reel/DZcosYrM7n6/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
தாய் பறவையின் இந்த தீரமானப் போராட்டத்தைக் கண்டு நெகிழ்ந்த டிராக்டர் ஓட்டுநர், உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்துள்ளார். அங்கு பறவையின் முட்டைகள் இருப்பதைக் கண்டு, மனிதநேயத்துடன் அந்தப் பறவையின் பாசத்திற்கு மதிப்பளித்து அதை அப்படியே தன் கேமராவில் பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…