இன்றைய காலகட்டத்தில் நாட்டின் எந்த மூலையில் திரும்பினாலும் தினம்தோறும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தான் காணப்படுகின்றன. காலை எழுந்ததும் செய்தியை பார்க்கும்போது ஏராளமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கண் முன்னே வந்து நிற்கிறது. பிறந்த குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை பாலியல் சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள்.
தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பட்டில் 11 மாத பெண் குழந்தையை 15 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டு சிறுவன் அடிக்கடி குழந்தையுடன் விளையாட வரும் விலையில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்று இந்த கொடூரத்தில் சிறுவன் ஈடுபட்டுள்ளான். இதனைக் கண்டறிந்த குழந்தையின் தந்தை அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.. 11 மாத பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் சிறுவன் செய்த இந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…