Connect with us

CINEMA

போதும் போதும் நிறுத்துங்க…! திருமணம் குறித்த செய்திக்கு தனது ஸ்டைலில் பதில் அளித்த நடிகை திரிஷா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் இவரது கேரியர் கொஞ்சம் டல் ஆனது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.  இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

   

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படி பிசியாக பல படங்களில் நடித்து வரும் திரிஷா 40 வயதை எட்டியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவருக்கு திருமணம் என சில நாட்களாக பல வதந்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளரை திரிஷா திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், நடிகை திரிஷா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களை பற்றியும் உங்கள் அணியை பற்றியும் உங்களுக்கே தெரியும். அமைதியாக இருங்கள், வதந்திகளை பரப்பாதீர்கள். வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். திருமண வதந்திகளை பரப்பியவர்களுக்கு திரிஷா தனது ஸ்டைலில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு…

author avatar
Continue Reading

More in CINEMA

To Top