Connect with us

CINEMA

என்னடா சொல்றீங்க?… நடிகை ரீமா சென்னின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…

செல்லமே, மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன், திமிரு போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரீமா சென். இதனை அடுத்து ரீமாசென் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் ’பகவதி’, விக்ரமுடன் ’தூள்’ , மாதவன் நடித்த ’ஜே ஜே’, ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில்  ’எனக்கு 20 உனக்கு 18’ ஆகிய படங்களில் நடித்தார்.

   

விஷால் நடித்த முதல் திரைப்படமான ’செல்லமே’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அர்ஜுன் நடித்த ‘கிரி’ மற்றும் விஷால் நடித்த ‘திமிரு’ ஆகிய படங்களில் நடித்தார். சிம்புவுடன் இவர் நடித்த ஒரே படமான ’வல்லவன்’ படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. ‘மின்னலே ‘ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானர் .

பொதுவாக நடிகைகள் மார்க்கெட் குறைந்தவுடன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். அதேபோல இவர் மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்  இவர்களுக்கு ருத்ரவீர் சிங்  என்ற மகன் உள்ளார் .திருமணத்திற்கு  பிறகு இவர் திரைத்துறையில் நடிக்கவில்லை.

நடிகை ரீமாவின் கணவர் ஒரு மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் என்பதால் அந்த ஹோட்டல் நிர்வாகங்களையும் ரீமாவே கவனித்துக் கொண்டு வருவதாகவும், நூற்றுக்கணக்கான கோடிக்கு அவர் சொந்தக்காரர் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் இனிமேல் நடிக்கப்போவதில்லை என உறுதியாக சொல்லிவிட்டாராம் அம்மணி.

Continue Reading

More in CINEMA

To Top