Connect with us

CINEMA

தேவிஸ்ரீ பிரசாந்தை தொடர்ந்து இசைஞானி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா… வைரலாகும் வீடியோ…

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில்  அறிவிக்கப்பட்டது.

   

அதன்படி  டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய  விருதை அறிவித்தார். இந்த 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.  இதில் இ.வி.கணேஷன்பாபு கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்திருந்த ‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று  சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு புஷ்பா திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)

 

author avatar
Continue Reading

More in CINEMA

To Top