CINEMA
‘மைதாவை சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதை போல நடிகை ஹன்சிகா’… சர்ச்சை பேச்சால் பரபரப்பை கிளப்பிய நடிகர் ரோபோ சங்கர்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக நடிகை ஹன்சிகா சமீபத்தில் கூறியிருந்தார்.
மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரி’ படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார். இவரைப் பற்றி தற்பொழுது நடிகர் ரோபோ ஷங்கர் கூறிய கருத்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது நடிகர் ரோபோ சங்கர் ‘நடிகை ஹன்சிகாவை மெழுகில் செய்து வைத்த பொம்மை என்றும் ,மைதா மாவை பிசைந்து அதனை உருட்டி சுவற்றில் இருந்தால் ஒட்டிக் கொள்வதைப் போலத்தான் ஹன்சிகா’ என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த சர்ச்சை பேச்சானது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.