Connect with us

CINEMA

‘கேப்டன் மில்லர்’ விழாவில் ‘கேப்டன்’ விஜயகாந்துக்காக தனுஷ் செய்த செயல்.. உறைந்து போன ஒட்டுமொத்த அரங்கம்..

கேப்டன்  விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு அனைத்து பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வந்து இருந்தனர். கேப்டன் விஜயகாந்தால்  தூக்கிவிடப்பட்ட  நடிகர்களான வடிவேலு, தனுஷ், சூர்யா, விஷால்  என பல பிரபலங்கள் வரவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.  பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நடிகர் தனுஷ்ன் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியிட்டு  விழா சென்னை நேரு  ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது.

   

இந்த நேரத்தில் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின்  பட விழா நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேப்டன் மில்லர் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் மாஸாக வந்திருந்தார்.

நடிகர் தனுஷ் மேடையில் ஏறியதும் தன்னை தூக்கி விட்ட கேப்டன் அவர்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் கூறி, அவருக்காக அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். நடிகர் தனுஷ் கேட்டுக் கொண்டதன் பேரில் ரசிகர்களும், படக் குழுவினரும், நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் விஜயகாந்த் மறைந்ததற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் தனுஷ் செய்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னை தவறாக விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் செயல் இருக்கிறது.
நடிகர் தனுஷ் செய்த செயல் இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top