Connect with us

CINEMA

“மன்னிச்சிருங்க திடீர்னு பண்ணதால யாருக்கும் சொல்ல முடில”.. 2-வது திருமணத்தை முடித்த சாண்டியின் முதல் மனைவி காஜல்.. அவரே வெளியிட்ட பதிவு..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக  நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கமலஹாசனின் ‘வசூல்ராஜா MBBS’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற  திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் .பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடன ஆசிரியர்  சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .

இவர்களின் விவாகரத்துக்கு பின்னர் சாண்டி மாஸ்டர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.   சமூக வலைதளங்களில் ஆக்டிவாக எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை காஜல் பசுபதி இவர் தனது மனதில் பட்ட விஷயங்களை அப்படியே எப்பொழுதும் ஓப்பனாக கூறி விடுவார்.

இந்நிலையில் அவர் தற்போது ‘தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது’ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் ‘திடீர் என முடிவு செய்ததால் இதை யாருக்கும் சொல்ல முடியவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரசிகர்கள் இது பொய்யாக கூட இருக்கலாம் என்றும், பழைய புகைப்படம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு,..

Continue Reading

More in CINEMA

To Top