Connect with us

CINEMA

‘தனி ஒருவன் 2’ படத்தின் வில்லன் இவர்தானா..? பிரபல நடிகரை ஸ்கெட்ச் போட்டு தட்டி தூக்கிய இயக்குனர்.. வெற்றிபெறுமா இந்த காம்போ..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  நடிப்பில்  2015ல் வெளியாகி  ‘தனி ஒருவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவருக்கென ஒரு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

   

இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தனி ஒருவன் 2 படம் எடுக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, நாசர், ராதாரவி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான தனி ஒருவன் படத்தை மோகன்ராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை படக் குழுவினர் ரசிகர்களுடன் சமீபத்தில் கொண்டாடினர். 

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. முதலில் நடிகர் மாதவனிடமும் , இவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இவர்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்களான அமீர்கான் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறுதியாக நடிகர் அபிஷேக் பச்சன் வில்லனாக தேர்வாகி மிரட்டப்போவதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயம் ரவி – அபிஷேக் பச்சன் இந்த காம்போ வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading

More in CINEMA

To Top