Connect with us

CINEMA

‘கல்யாணத்துக்கு அப்புறம் இப்டி தான் போய்ட்டு இருக்கு’.. திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த கீர்த்தி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் ‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

   

இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.

சோசியல் மீடியாவில் கீர்த்தியின் உருவத்தை கேலி செய்து பல்வேறு பெண்கள் கமெண்ட் செய்து வந்தனர். ‘இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று விமர்சித்தும் வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுத்தார் நடிகர் அசோக் செல்வன்.

 இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி  தங்களது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ அசோக் எனக்கு பார்ட்னரா கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கி என்றும்,  வீடு கிளீன் பண்றதுல இருந்து பெருக்கி துடைக்கிற வரைக்கும், சமையல் வரைக்கும் எல்லாமே அசோக் நானும் சேர்ந்து தான் பண்ணுவோம். என் physical தோற்றத்தை பத்தி கிண்டல் பண்ணும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றும் பல்வேறு விஷயங்களை பற்றி கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)

Continue Reading

More in CINEMA

To Top